Monday, 23 October 2017

தொடரும் தனி ஊதிய பாதிப்பு இந்த இடைநிலை(2800) ஆசிரியர் என்ன பாவம் செய்தார்கள்?

தொடரும் தனி ஊதிய பாதிப்பு
இந்த இடைநிலை(2800) ஆசிரியர் என்ன பாவம் செய்தான் அனைத்துவகையான ஆசிரியகளுக்கும் ஊதியம் உயர்த்திவிட்ட அரசு .750pp தலைவலியை உருவாக்கி.ஆண்டுஊதிய உயர்வுக்கும். அகவிலைப் படி .சேர்த்து கணக்கீடு செய்யப்பட்டது.

🔰ஆனால் தற்பொழுது உள்ள அரசு.750 யை2000 உயர்த்தி தீராத புற்றுநோய்யை உருவாக்கி உள்ளது.

🔰இந்த தனி ஊதியம் ஏழாவது ஊதியக்குழுவில் எதற்கும் பொருந்தாத ஒரு படி அவ்வளவே

🔰5200+2800 பெறும் இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தனி ஊதியம் 750 1.1.2011 -1.1.2016 காலகட்டத்தில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரிக்கு 4600+750 எனவும் , துவக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு 4500+750 எனவும் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்கப்பட்டது

🔰மேற்கண்ட காலத்தில் அடிப்படை ஊதியத்தோடு சேர்த்து வழங்கப்பட்ட 750தனி ஊதியம் 1.1.2016 ல் 2.57க்கு ஆளாகி 2000ஆக அடிப்படை ஊதியத்தோடு ஏழாவது ஊதியக்குழுவிலும் ஒளிந்துகொண்டு தொடர்கிறது

🔰இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தனிஊதியம் 750 பதவிஉயர்வு சென்றபிறகும் அடிப்படை ஊதியத்தோடு தொடர்ந்து ஏழாவது ஊதியக்கழுவிலும் தொடருவது எவ்வகையிலும் சரி ?

🔰இடைநிலை ஆசிரியருக்கு வழங்கிய தனி ஊதியம் ஏழாவது ஊதியக்குழுவில் பட்டதாரிக்கு , துவக்கப்பள்ளி த.ஆசிரியருக்கு அடிப்படை ஊதியம் + 2.57க்கு வருமெனில் 5200+2800 தர ஊதியத்தில் தொடரும் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியருக்கு 2.57 க்கு பொருந்தாது போனதேன் ??

🔰1.1.2011 முதல் தனி ஊதியம் பதவி உயர்வில் சேர்வதும் 2011க்கு முன்பாக சேராது என்பதும் , 2016 லிருந்து அடிப்படை ஊதியத்தோடு இணையாது என்பதும் லட்சக்கணக்கான ஊதிய முரண்பாடுகளை மேலும் மேலும் உருவாக்கும் ..

🔰தனிஊதியம் 750 ன் முரண்பாடுகள் ஏழாவது ஊதியக்குழுவிலும் தொடர்கிறது பல நீதிமன்ற வழக்குகளோடு ...

🔰அனைத்திற்கும் ஒரே தீர்வு 9300+4200மட்டுமே

அன்புடன்

சுரேஷ் மணி

நாமக்கல்
9943790308

No comments:

Post a Comment