*குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''..*
.......................................
குழந்தைகள் களிமண்ணை போன்றவர்கள், அவர்களுக்கு சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
குழந்தைகளை பெற்று போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;
பெற்ற குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழ கற்று தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமை ஆகும்.
ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞருக்கு நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்துவிட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்..
உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்ஸை பார்த்த அவரது தாயார் மிகவும் துடி துடித்து விட்டார்..
மிகுந்த வேதனையுடன் தன் மகனைப்பார்த்து,
'' யார் உன்னை இப்படி காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..
அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்னை என் சக மாணவன் அடித்து விட்டான் என்றார்.. அதற்கு அவரின் அம்மா, "நீயும் அவனை திருப்பி அடித்தாயா? என்று கேட்டார்..
ஹேல்க் எல்லீஸ் அமைதியாக,'' இல்லையம்மா, நானும் திருப்பி அடித்தால் நானும் அவனைப்போல் முரடனாகத்தானே வருவேன் என்றார்..
அவரது அன்புத்தாய் அவனை அப்படியே கட்டி அனைத்துக் கொண்டார்..
உங்கள் பிள்ளைகளுக்கு உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்..
குழந்தைகளுக்கு சிறந்த பண்பு நலன்களை கற்றுத்தரும் கடமையானது, பெற்றோர்களுக்கு மட்டுமே உரியது அல்ல.
அதில், ஆசிரியர்களுக்கும் மிகுந்த பங்குண்டு என்பதை மறத்தலாகாது.
ஆசிரியர்களை, பல குழந்தைகள் தங்களின் முன்மாதிரி ஆளுமைகளாக எடுத்துக்கொள்கின்றன.
No comments:
Post a Comment